உ.பி: சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம்!

உ.பி.யில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம் என தகவல்.

உத்தரப்பிரதேசம் முழுவதும் இன்று அடர்ந்த மூடுபனி காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுரையா, கான்பூர் தேஹாட், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயமடைந்துள்ளனர். கன்னோஜில், தேர்வு எழுதச் சென்ற 7 மாணவிகளின் வாகனம் டிரக் மீது மோதியதில் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment