3 லட்சம் கோடியை மத்திய அரசு எங்கிருந்து கொண்டு வரவுள்ளது.? மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கேள்வி.!

அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதை எப்படி மத்திய அரசு பெற போகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அரசிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம்  மாநிலங்களவையில் பேசுகையில், அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த கூடுதல் நிதியை மத்திய அரசு எங்கிருந்து பெறப்போகிறது என்ற கேள்வியை மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் எழுப்பினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment