வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது-தமிழச்சி தங்கபாண்டியன்

மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிதித்துறை தனிப்பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள்.நிர்மலா சீதாராமன் எங்கள் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்தியா தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியடைந்து வருகிறது . தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளது. பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பேசினார்.