தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.! ஈ.பி.எஸ் செய்கிறார்.! – உதயநிதி டிவீட்.!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார். அதனை தமிழக முதல்வர் செய்கிறார்.! – உதயநிதி ஸ்டாலின் டீவீட்.

தமிழகத்தில் நேற்று ஊரடங்கு தளர்வு நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதில் மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளை இயக்குவது, இ-பாஸ் தமிழகத்திற்குள் செல்ல தேவையில்லை என்பது, உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், ‘ தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது உள்ளிட்ட  பல்வேறு விஷயங்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனை அச்சுப்பிசகாமல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உட்பட அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் ( மு.க.ஸ்டாலின்) சொல்கிறார் அதனை ஈபிஎஸ் செய்கிறார்.’ என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.