பாஜக வேட்பாளரை காலால் எட்டி உதைத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்…!

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று  கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது.இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜாய் பிரகாஷ் மஜூம்தார். நாடியா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஜாய் பிரகாஷ் சென்று கொண்டு இருந்த காரை வழிமறித்தனர்.இதை தொடர்ந்து  ஜாய் பிரகாஷ் கீழே இறங்கினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை காலால் எட்டி உதைத்து செடிக்குள்  தள்ளினார்.
இதில் நிலைதடுமாறி ஜாய் பிரகாஷ் கீழே விழுந்தார்.இதைக்  பார்த்த பாதுகாப்புப் படையினர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

author avatar
murugan