வெற்றியே தவிர வெற்றிடம் இல்லை- துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று தெரிவித்தார்.தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்காகவே நாங்கள் என்று ஜெயலலிதா பாணியில் பன்னீர் செல்வம் பேசினார்.
மேலும் நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை நாம் பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் செய்யும் மரியாதை என்றும் தெரிவித்துள்ளர்.