வயலில் வைத்து ஜாமினில் வந்த ரவுடி வெட்டிக்கொலை..!

தஞ்சாவூர் மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த  ஆண்டுஅய்யனார் கோவிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் உறவினர்களுக்கிடையில் நடைபெற்ற பிரச்சனையில் மணிகண்டன்  என்பவர் ஒருவரை தாக்கியத்தில் காயமடைந்து உள்ளார்.
இதனால் மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து திருச்சியில் உள்ள சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் மணிகண்டன் ஒருமாத ஜாமினில் வெளியில் வந்து உள்ளார்.
நேற்று காலை ஆடுகளுக்கு புல் வெட்ட மணிகண்டன் வயலுக்கு சென்று உள்ளார்.அப்போது அங்கு மறைந்து இருந்த 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனை கட்டையால் மற்றும் அரிவாள் கொண்டு தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார்.
இந்த கொலை குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மணிகண்டன் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan