திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது – கடம்பூர் ராஜு

திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது  என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பின்னர்  அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.அதிமுகவின் இந்த வெற்றியால் கட்சிகள் அனைத்தும் ஆடிப்போயுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.