தெய்வமகள் சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை !

சன் டிவி  தெய்வமகள் சீரியலில் சத்யா  என்ற கேரக்டர் மூலம் பலரின் குடும்பத்திற்கு வேண்டியவராகிவிட்டார். வாணி போஜன்  என்ற அவரின் உண்மை பெயரை விட சத்யா என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும்.

சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ”உடைத்து பேசுவேன்” என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். பாலியல் கொடுமைகள் குறித்து பேசினர்.

இதில் பேசிய சத்யா தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி ஓப்பனாக சொல்லிவிட்டார். அவர் 4 ம் வகுப்பு படிக்கும் போது தன் தோழி வீட்டிற்கு சென்றிருந்தாராம்.

அப்போது அந்த தோழியின் அப்பா உன் ஃபிரண்ட் மேலே இருக்கிறார் என சொல்லி சத்யாவை வீட்டிற்குள் அழைத்து கதவை பூட்டிவிட்டு சத்யாவை தொந்தரவு செய்தாராம்.

இதனால் எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. என நடக்கிறது என தெரியவில்லை. என் தோழியிடம் சொல்ல முடியவில்லை. ஒருவேளை சொல்லியிருந்தால் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாது.

சமீபத்தில் ஹாசினிக்கு நடந்த சம்பவம் போல எனக்கும் நடந்திருந்தால் என உருக்கத்துடன் பேசினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment