சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

  • குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெறுகிறது.
  • சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அண்ணா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டுவந்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். வரும் 23ம் தேதி நடக்கும் பேரணியுடன் போராட்டம் முடிவு பெறாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை  திமுக தலைமையில்  சென்னையில் பேரணி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.