கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வு வரும் ஜனவரி மாதம் தொடங்கும்- மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்வளர்ச்சி  துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வு வரும் ஜனவரி மாதம் தொடங்கும்.திமுக ஆட்சியில் இருந்தபோது தொல்லியல் துறைக்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லை .கீழடி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அது தேவையற்றது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.