நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு மாலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்தது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இறந்தவர்களில் 35 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் காரணமாக இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.மேலும் பள்ளிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்தனர்.
இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்ததாகவும். குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள்.
மேலும் இலங்கையில் வதந்தி செய்திகள் பரவாமல் இருக்க தொலைத்தொடர்புகள் மற்றும் வலைத்தளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.