#IPL2022:முதல் முறையாக களத்தில் இன்று குஜராத்-லக்னோ அணிகள் மோதல்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்கம்.

TATA IPL 2022 இன் நான்காவது போட்டியான இன்று,ஐபிஎல் சீசனின் இரண்டு புதிய அணிகளான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.ஐபிஎல்லில் முதல் முறையாக இரு அணிகளும் களமிறங்குவதால் இப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அணிகள்(Squads):

சாத்தியமான குஜராத் டைட்டன்ஸ் அணி: ஷுப்மன் கில்,மேத்யூ வேட் (வி.கீ), விஜய் சங்கர்,டேவிட் மில்லர்,அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா,வருண் ஆரோன்,ரஷித் கான்,முகமது ஷமி,லாக்கி பெர்குசன்

சாத்தியமான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி:கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, அங்கித் ராஜ்பூத், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.