நாட்டின் பாதுகாப்பு தற்போது வலுப் பெற்றுள்ளது- பிரதமர் மோடி

நாட்டின் பாதுகாப்பு தற்போது வலுப் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் ரிவாரி பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  பாஜக ஆட்சியில் நமது படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.நவீன நீர்மூழ்கி கப்பல்கள், ரஃபேல் நவீன போர் விமானங்கள் நமது படையில் சேர்க்கப்பட்டுள்ளன .நாட்டின் பாதுகாப்பு தற்போது வலுப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.