ஊழல் என்ற குழந்தை பிறந்தது திமுக ஆட்சியில் தான்…! – முதல்வர் பழனிசாமி

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி ஆரல்வாய்மொழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், திமுக அமைச்சர்கள் தாங்கள் மீதான  வாய்தா வாங்காமல் எதிர்கொள்ள தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மிகப்பெரிய ஊழல் திராவிட முன்னேற்ற கழகம். என்றைக்கு திமுக தலைவர் ஆனாரோ, அன்றைக்கே ஊழல் என்கின்ற குழந்தை பிறந்து விட்டது. ஊழல் என்ற குழந்தை பிறந்தது திமுக ஆட்சியில் தான் என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி தான் என்றும் விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.