பட்டாசுக்கு எந்த பாதிப்பும் இல்லை : சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சந்தித்தனர்.

பின்னர் சபாநாயகர் தம்பிதுரை எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்படாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பட்டாசு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை . பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு உற்பத்திக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது.’ என கூறினார்

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment