வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை…! சுவர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகிகள்…!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்,  அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பெண் நிர்வாகிகள், சுற்றுச்சுவர் மீது ஏறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது. நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் காலை முதல் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பெண் நிர்வாகிகள், சுற்றுச்சுவர் மீது ஏறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.