அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள்…!ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு …!

முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுமுறை எடுக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு அலுவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Image result for பள்ளிக்கல்வித்துறை
இது தொடர்பாக மாவட்ட வாரியாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அரசு அலுவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மரணமடையும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கூடாது.
உரிய விண்ணப்பம் தராமல் விடுமுறை எடுக்கும் ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் தயங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment