தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனித நேயமின்றி தட்டி பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது : மு.க.ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரத்தில், அனைத்து கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் உள்ள வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனித நேயமின்றி தட்டி பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது என்றும், இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment