பொதுக்குழு கூட்டம்: மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? – பாமக இன்று முடிவு…

PMK

மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும், இந்த பொதுக்குழு … Read more

கூட்டணி பேச்சு இன்னும் தொடங்கவில்லை… நாளை பொதுக்குழு கூட்டம் – பாமக

PMK

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேசிய மற்று மாநில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மறுபக்கம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக, தமிழகத்தில் வலுவான புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு … Read more

நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!

சென்னையில் நாளை அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நாளை காலை 10.35 மணிக்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் … Read more

#BREAKING: ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் – அவைத்தலைவர் அறிவிப்பு

அதிமுகவின் அடுத்த பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். பொதுக்குழு கூட்டம் தொடங்கியவுடன், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த … Read more

#Breaking:சற்று முன்…பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லலாமா? – ஓபிஎஸ் அவசர கடிதம்!

அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது. இதனிடையே,அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.எனினும்,ஈபிஎஸ்ஸை சந்தித்து கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வலுப்பெற்று வருகிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் ஈபிஎஸ்க்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக … Read more

#Breaking:”இதனை தடுக்க முடியாது” – ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த காவல்துறை!

அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டமானது சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதனால்,இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது என்றும் கூறி,பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி ஓபிஎஸ் கையெழுத்துடன் கூடிய மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று கொடுக்கப்பட்டது. இந்நிலையில்,ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது.பொது … Read more

#Breaking:ஈபிஎஸ் பொதுச்செயலாளரா?…தருமம் மறுபடியும் வெல்லும் – ஓபிஎஸ் அதிரடி!

தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,எம்ஜிஆர்,ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடம் … Read more

#Breaking:நாளை பொதுக்குழு கூட்டம் – இரட்டைத் தலைமை விதிமுறைகள் நீக்கமா?- வெளியான முக்கிய தகவல்..!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.அப்போது பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால்,தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில்  நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய … Read more

#JustNow: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது – ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பன்னீசெல்வம் தரப்பு மனு. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் மனு அளித்துள்ளார். அந்த கடிதத்தில், வரும் 23ம் தேதி வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். … Read more

பரபரப்பு…ஒற்றைத் தலைமை;ஓபிஎஸ்தான் வரவேண்டும் – தொண்டர்கள் முழக்கம்!

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து,வரும் 23-ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை … Read more