உத்திர பிரதேச மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பு நடத்த ரூ.7.86 கோடி ஒதுக்கீடு

உத்திர பிரதேச பா.ஜ.க. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பை (Census) நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிக்காக ரூபாய் 7.86 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பசுக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப் படவுள்ளன.

உ பி யில் “என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ” ஆட்சியா…?

சாமியார் ஆட்சி என்றால் அது சாத்வீகமாக இருக்கும் என்று பலரும் நினைப் பார்கள். ஆனால் உ பி யில் நடக்கும் பாஜக சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி கொலைகார ஆட்சியாக உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்த முதல் ஆறுமாதங்களிலேயே 431என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 22 பேர் மாண்டு போனார்ககள், 88 பேர் படுகாயம்பட்டார்கள். போலிசார் நடத்தும் என்கவுன்டர்கள் அனேகமாக போலியானவை என்பது உலகறிந்த ரகசியம். குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கித்தர வேண்டியது அரசின் கடமை என்பதில் அட்டியில்லை. … Read more