ISRO ஏவுதளம் – கால அவகாசத்தை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

ISRO வின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இஸ்ரோவின் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாதவன் குறிச்சியில் சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் 2021ல் தொடங்கப்பட்டன.