காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு 4வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்,தமிழக ஆளுநர் மற்றும் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா ஆகியோர் பங்கேற்ற சமஸ்கிருதம் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக காவல்துறையானது தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை விஜயேந்திரரின் உருவபொம்மை எரிப்பு-மாணவர்கள் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு … Read more

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த விஜயேந்திர சுவாமி-விளக்கம் அளித்துள்ள சங்கரா மடம்

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க … Read more