ஆர்கே நகர் இடைத்தேர்தல்: ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது அமைச்சர் ஜெயக்குமார்…??

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றதையடுத்து, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது எனவும் அதேபோல் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறாமல் அதிமுக முழுமையான ஒத்துழைப்பு அளித்தது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே நகர் தேர்தல் முடிவு: திமுக தோற்கவில்லை மாறாக தேர்தல் ஆணையம் தான் தோற்றுள்ளது-முக ஸ்டாலின்

வாக்குப்பதிவு தினமான இன்று ஹவாலா பாணியில் பணமானது வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்பட்டது.பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது.ஆகையால் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு தோல்வி இல்லை,மாறாக அது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என கூறியுள்ளார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்