மீண்டும் இந்தியா வருகின்றார் ராஜபக்சே…!!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தா ராஜபக்சே இந்திய பிரதமரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.இந்நிலையில் மீண்டும் ராஜபக்சே வர இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் இந்தியா வரும் ராஜபக்சே சுற்றுப்பயணமாக இந்தியா வருவதாகவும் , அவர் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேச இருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிக குறிகிய காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியா வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.