உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் – அமைச்சர் முத்துசாமி

உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் என அமைச்சர் முத்துசாமி புகழாரம்.  அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர்; என்ன செய்தாலும் சிறப்பாக செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் உள்ளது. இனிமேல் ஒரு கட்டடம் கூட அனுமதி இல்லாமல் கட்டப்படாது என உறுதியளிக்கிறோம்; ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இனிமேல் அனுமதி பெறாமல் வீடு காட்டினால் இடித்து அகற்றப்படும் – அமைச்சர் முத்துசாமி

இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு என அமைச்சர் முத்துசாமி பேட்டி.  ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட உரிமையாளர்களை விட, பொறியாளர்களுக்கு … Read more

சாதி கொடுமை : கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்..! விசாரணைக்கு உத்தரவு…!

கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம். கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்,  கோபிநாத் என்பவர்  வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் வண்ணம் நடந்துள்ளார். அப்போது விஏஓ-வின் உதவியாளரான முத்துசாமி … Read more