மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது இந்நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக, தற்காலிக ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி … Read more

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

2nd phase polling

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி … Read more

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Polling status

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் … Read more

சூடுபிடிக்கும் அரசியல் களம்… மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு!

India Alliance

Maharashtra : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபக்கம் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. Read More – பாஜகவில் இணைவது குறித்த … Read more

பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

Ashok Chavan

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே, அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து அசோக் சவானும் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

ashok chavan

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அசோக் சவான் விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தேசியாக கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

bjp MLA

மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் … Read more

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

pm modi mumbai

30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மகாராஷ்டிரா மாநிலம் வருகை தந்தார். அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் ‘ஸ்வச்சதா அபியான்’ (தூய்மை இயக்கம்) நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள காலாராம் கோயிலின் தரையை மாப் போட்டு சுத்தம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இன்று பிற்பகல் 3:30 மணி அளவில், அடல் சேது என … Read more

ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரமில்லை.! மகாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பு.!

Eknath Shinde - Uddhav Thackeray

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டுகள் கடந்த இந்த ஆட்சியில், அடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கிய தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. இந்த அரசியல் … Read more

மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி!

INDIA ALLIANCE

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும், இந்தியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பாஜகவை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளோடு, வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி, பல்வேறு  ஆலோசனைகளை மேற்கொண்டு, வியூகங்களை வகுத்து வருகிறது. இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது வரை பிரதமர் வேட்பாளரையோ, தொகுதிப் பங்கீட்டையோ இறுதி செய்யாமல் இந்தியா’ கூட்டணி கட்சிகள் … Read more