அரசியல் நெறி… மதுரை எம்.பி சு.வெங்கடேசனை போனில் பாராட்டிய செல்லூர் ராஜு.!

Sellur Raju - Su Venkatesan

மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை, எம்பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மதுரை, வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள விழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குள மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு , தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு … Read more

அரிட்டாபட்டி சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சித்தால் அது நடக்காது.! – எம்பி சு.வெங்கடேசன் ஆய்வு.!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பாறை, குன்றுகள் இயற்கை சங்கிலிகள் இன்னும் அரிட்டாபட்டியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதன் மாண்பு குறையாமல் பாதுகாக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கடந்த 2020 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. தற்போது அது குறித்து, திட்டமிடலுக்காக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அரிட்டாபட்டியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக … Read more

இந்தி திணிப்பை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது.! எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்.!

டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலை கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்று கற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறித்து, இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 130 கோடி மக்களும் தமிழை காப்பாற்ற வேண்டியது கடமை என … Read more

இந்திக்கு தனி உரிமை.! தமிழக இளைஞர்களுக்கு அநீதி.! எம்.பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கடும் விமர்சனம்.!

SSC தேர்வுகளுக்கு இந்தியில் கேள்வித்தாள் இருக்கிறது. ஆனால், அதற்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை. இது தமிழக இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி. என எம்.பி சு.வெங்கடேசன் டிவீட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.  அண்மையில், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL எனும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று … Read more