திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜெயராமன் விடுதலை

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயராமன் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் விடுதலை செய்யப்பட்டனர். கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்தை தடைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கனலாய் எரியும் கதிராமங்கலம்:கண்களை மூடி போராட்டம்…!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஜெயராமன் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கதிராமங்கலத்தை விட்டு நிரந்தரமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், இதற்காக போராடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி … Read more

112வது நாட்களாக தொடரும் நெடுவாசல் மக்களின் போராட்டம்…!

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று பெண்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து மண்ணில் ஊற்றினர். அதில் விவசாயிகள் ஏர்பூட்டி உழவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 112வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  திரளான விவசாயிகள், பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்தை் கண்டித்து கோஷமிட்டனர்.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் … Read more

ONGCக்கு எதிராக மடிப்பிச்சை எடுக்கும் போராட்டம்

தஞ்சை ‌மாவட்டம் கதிரா‌‌மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து மடிப்பிச்சை எடுக்கும் போ‌‌ராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டத்தின் போது கைதான 10 பேரையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.என்.ஜி.சி-யால் மாசுபட்ட குடிநீரை அருந்துவதன் மூலம் ஏற்‌டும்‌ விளைவுகளை நாடகத்தின் மூலமாக விளக்கியும், மடிப்பிச்சை எடுக்கும் போராட்டத்திலும் குழந்தைகள் ஈடுபட்டனர்.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு- போராடத்தில் களமிறங்கிய ஸ்டாலின்!!

தங்கள் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் கதிராமங்கலம் கிராம மக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஓஎன்ஜிசி … Read more

பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்திற்கு எதிராக 31ம் தேதி கடலூரில் மதிமுக போராட்டம்

கடலூர்: பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்திற்கு எதிராக 31ம் தேதி கடலூரில் மதிமுக போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார். மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகில் மல்லை சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். கடலூர், நாகை மாவட்டங்களில் மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மண்டலத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் எனவும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்:போலீஸ் குவிப்பு

சென்னை:கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருவதால், மெரினா கடற்கரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் சில நாள்கள் முன்னர் தீடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளை அனுமதிக்க பொதுமக்கள் மறுத்துவிட்டனர். அங்கு வந்த போலீஸாருக்கும் போராட்டம் செய்யும் மக்களுக்குமிடையே தள்ளு … Read more

ONGCக்கு எதிராக 4 நாளாக காத்திருப்பு போராட்டம் ….!

தஞ்சை:கதிரமங்கலத்தில் பதிக்கபட்டுருந்த எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அக்கிராமமக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.    கதிரமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 போரையும் விடுவிக்ககோரியும் அய்யனார்கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

கதிரமங்கலதிற்கு ஆதரவாக போராட்டத்தில் மாணவர்கள்…..!

நாகை மாவட்டம்,நாகை புத்தூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் கடுமையாக பாதித்து கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.எனவே மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி மக்களின் இயல்பு நிலையை உத்திரவாதப்படுத்த வேண்டும்.கைது செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும் என்ற போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் ப.மாரியப்பன் தலைமை வகித்தார்,பங்கேற்ப்பு மாவட்டத்தலைவர் மு.ஜோதிபாஸ்,மாவட்ட துணை தலைவர் அ.ஸ்ரீதரன் … Read more

கதிராமங்கலம் போராட்டகாரர்கள் 10 பேரின் காவல் நீட்டிப்பு: கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த கதிராமங்கலத் தில் கடந்த மாதம் 30-ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், தர்ம ராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங் கட்ராமன் ஆகியோர் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரிகள் பணி செய்வதை தடுத்தது, மிரட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளை வித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் … Read more