நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.கர்நாடக பேரவையில் நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது.

நாளை நடைபெறும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை-அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டம்

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற  ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது .இந்த வழக்கை  இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. .ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை நடைபெறும்  … Read more

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள்  தொடர்ந்த வழக்கு : இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில்  ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது .அவர்களது மனுவில் ,தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக  தெரிவிக்கப்பட்டது. இந்த  வழக்கின் விசாரணை நேற்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது.நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.

சபாநாயகர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். கர்நாடகாவில்  ராஜினாமா செய்த  எம்.எல்.ஏ.க்கள்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள். இந்த  வழக்கின் விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது … Read more

கர்நாடகா சபாநாயகர் மீது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராஜினாமா செய்த  எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.மேலும் 5  எம்.எல்.ஏ.க்களும் மனுதாக்கல் செய்தனர். இந்த  வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டும்  என்றும் ராஜினாமா … Read more