கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கமும், மாதர் சங்கமும் இணைந்து ரேஷன், நகர்ப்புற வேலை வாய்ப்பு, நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க  கோரி பெரும் திரள் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. இதில்  சுமார் 3000 பேர்க்கு மேல்  கலந்துகொண்டனர்.

இன்றுமுதல் சீசன் கன்னியாகுமரியில் ஆரம்பம்!

கன்னியாகுமரியில், தினமும்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமான அளவில் வந்துசெல்கின்றனர்.ஆனால் இங்கு, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்று இருந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில்தான் கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாகக் காணப்படும். இதை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா சீசன் காலம் என்று சொல்வார்கள். சபரிமலை மண்டல பூஜைக்காக வரும் பக்தர்கள், கன்னியாகுமரிக்கும் வருவார்கள். டிசம்பர் மாதத்தில் பள்ளிக்கூடங்களில் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை … Read more