கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு. கள்ளக்குறிச்சி கலவரத்தால் சேதமடைந்த கனியாமூர் தனியார் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு இன்று தொடங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி மூடப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து … Read more

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு!

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் வழக்கு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன் பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக … Read more

#BREAKING: கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்பு – அமைச்சர்

கனியாமூர் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கனியாமூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், கட்டாய கல்வி உரிமை … Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – அமைச்சர் அறிவிப்பு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என அமைச்சர் அறிவிப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் வன்முறையில் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்பி பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இதன்பி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் … Read more