ஃபிஃபா உலகக்கோப்பை, கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம்-CEO சுந்தர் பிச்சை

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவு கூகுள்தேடல் பதிவு என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கத்தாரில் நேற்று நடந்த ஃபிஃபா உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து நேற்று ஒருநாளில் கூகுளில் 25 வருடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, கூகுள்தேடல் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக … Read more

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி! பாரிஸில் வெடித்த கலவரம்.!

ஃபிஃபா உலககோப்பையின் பிரான்ஸ் தோல்வியை அடுத்து, அந்நாட்டின் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. ஃபிஃபா கால்பந்து உலககோப்பை 2022இன் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினா பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் 4-2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல பிரெஞ்சு நகரங்களின் தெருக்களில் மோதல்கள் வெடித்ததால், கலவரத்தை அடக்க பிரெஞ்சு போலீசார், கால்பந்து … Read more

ஃபிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி, படைத்த பல்வேறு சாதனைகள்!

ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார். கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரின்  இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி இந்த உலககோப்பையின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லியோனல் மெஸ்ஸி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். மெஸ்ஸி அதிக உலககோப்பைகளில் பங்கேற்று அதாவது 26, ஃபிஃபா உலகக் கோப்பைகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 19 உலகக் கோப்பை … Read more

உலகக்கோப்பையில் கோல்டன் பூட், கோல்டன் பால் விருதுகள் யாருக்கு?

ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு கோல்டன் பூட், கோல்டன் பால், மற்றும் கோல்டன் க்ளவ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றுள்ளார். மேலும் 56 வருடங்களுக்கு பிறகு எம்பாப்பே, உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் … Read more

தான் ஓய்வு பெறப்போவதில்லை மெஸ்ஸி அதிரடி முடிவு.!

தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக்  கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த … Read more

FIFA WorldCup2022: 3-வது இடம் யாருக்கு? குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது … Read more

FIFA WorldCup2022: இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா, குரோஷியா மோதல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் … Read more

கத்தாரில் பிஃபா கால்பந்து போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்!

கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கத்தார்க்கு கடந்த 27 ஆம் தேதி சென்றார். கத்தார் சென்ற அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிஃபா கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானமான “அகமது பின் அலி” மைதானத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில் … Read more

#FIFA2022: லியோனல் மெஸ்ஸியின் பெனால்டியால் ஈக்வடாரை வீழ்த்திய அர்ஜென்டினா

வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஈக்வடார் அணியை  1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 2022 இல்  நடைபெறவிருக்கும்  ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.இதில் ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.இதில் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி 13 வது நிமிடத்தில் அடித்த பெனால்டி அர்ஜென்டினா வெற்றிக்கு வழிவகுத்தது . இதனைத்தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி  “ஒரு வெற்றியைத் தொடங்குவது … Read more