தான் ஓய்வு பெறப்போவதில்லை மெஸ்ஸி அதிரடி முடிவு.!

தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக்  கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த பேட்டியில், நான் அர்ஜென்டினா அணியிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை, இன்னும் நான் சாம்பியனாகவே விளையாட விரும்புகிறேன். உலகக்கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனது கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியை வெற்றியுடன் முடித்தது மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment