#BREAKING: சிறுமி மரணம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 5-ஆம் வகுப்பு சிறுமி பள்ளி அருகே உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த … Read more

எனக்கு ஆண்மை இல்லை – சி.பி.சி.ஐ.டி-யிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்!

தனக்கு ஆண்மை இல்லை என்று சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார், சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா … Read more

மேற்கு வங்க தேர்தல் வன்முறை – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரிக்கும் என்றும் தங்கள் கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக … Read more

#BREAKING: சிறப்பு டி.ஜி.பி. மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக … Read more

பொள்ளாச்சி விவாகாரம்…! தமிழக அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்ற முடிவு….!!!

பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரை புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். … Read more