ஜன.1 முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை – கூட்டுறவுத்துறை

நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய நடைமுறையை அமல்படுத்த அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது, ஜனவரி 1 முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாநில அரசின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 20 கிலோ அரிசி வழங்கினால், அதில் மத்திய அரசு வழங்கும் 15 … Read more

ஆண்டுதோறும் 500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் – அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் பதில். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்களின் தேவை என்பது அருகில் கடைகள் வரவேண்டும் என்றும் பேருந்துகள் … Read more

நகைக்கடன் தள்ளுபடி… நகைகளை திரும்ப வழங்குவது எப்போது? அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்!

5 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் நிலையில் உள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். … Read more