நகைக்கடன் தள்ளுபடி… நகைகளை திரும்ப வழங்குவது எப்போது? அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்!

5 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் நிலையில் உள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். … Read more

‘விடியா அரசே!நகைக்கடன் தள்ளுபடி,பெட்ரோல், டீசல் விலை குறைப்பை நிறைவேற்றிடு’ – இபிஎஸ் வலியுறுத்தல்!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பற்றிய எந்த விவரமும் தமிழக அரசின் அரசாணையில் இல்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும்,நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பையும் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடனிலே பிறந்து, கடனிலே … Read more

நகைக்கடன் எப்போது ரத்து செய்யப்படும்….? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்…!

நகை கடன் ரத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி வழங்கிய பின், அரசாணை வெளியிடப்படும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், நகை கடன் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஏன் இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தடுமாறி அதற்குரிய ஆணை முதலமைச்சர் ஆன பின் வெளியிடுவார் என கூறினார். அதற்கு செய்தியாளர்கள், முதலமைச்சர் ஆனால் தான் நகை கடன் … Read more

கூட்டுறவு வங்கி நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்க உத்தரவு..!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் தமிழக அரசின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விதி எண் 110ன் … Read more