ரூ.15 கோடி மதிப்புள்ள கோகோயினை தனது வயிற்றில் கடத்திய நபர் கைது!

மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 116 கோகோயின் துண்டுகளை விழுங்கி கடத்த முயன்ற நபர் கைது. மும்பையில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள கோகோயின் அடைக்கப்பட்ட 116 துண்டுகளை விழுங்கி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட காங்கோ நாட்டவர்(51) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நபர் 115 துண்டுகளை மலம் வழியாக எடுத்ததாகவும், ஒன்று மட்டும் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அதனை வெளியே எடுக்க மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி அறுவை … Read more

$278 மில்லியன் மதிப்புள்ள 1.8 டன் கொக்கைன் பறிமுதல்.!

நைஜீரியாவில் $278 மில்லியன் மதிப்புள்ள 1800 கிலோ கொக்கைன் எனும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உலகம் முழுவதிலும் அதிகமானோர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகிக்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. நைஜீரியாவின், லாகோஸில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 1.8 டன் கொக்கைன் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் $278 மில்லியன் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க ஏஜென்சியின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட போதைப்பொருள்கள் ஐரோப்பா … Read more

#Breaking:அடுத்த டார்கெட் கோகோ கோலா – எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில்,இறுதியாக ட்விட்டரில் 100 சதவீத பங்குகளை சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இந்நிலையில்,கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் கூறியதாது:”அடுத்து … Read more

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் லென்ஸ் பெட்டியில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு – என்சிபி தகவல்….!!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் சிறிய லென்ஸ் பெட்டியில் (lens case) இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தெரிவித்துள்ளது.  மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தடை செய்யப்பட்ட போதைப்பொருள்: இதன்காரணமாக,அந்த சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் … Read more

தூத்துக்குடியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்…!

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கப்பலில் சந்தேகப்படும்படியாக 6  கண்டெய்னர் பெட்டிகளை மடக்கிப் பிடித்துள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடிக்கு வரும் கண்டெய்னர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மரக்கட்டைகள் கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு பனாமா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. … Read more

சினிமா பாணியில் வயிற்றுக்குள் கொக்கைன் கடத்தி சென்ற பெண்.!

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் ஏர் கார்கோ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கௌதமாலா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்தப் பெண் 150 கொக்கைன் காப்ஸ்யூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் ஒரு சிறிய டியூபில் அவற்றை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்புடன் வைத்திருந்த பெண்ணின் வயிற்றில் இருந்த அனைத்து காப்ஸ்யூல்களும் பறிமுதல் … Read more