கஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்

ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989-ஐ ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.   இதன் மூலம் நாட்டின் இதர பகுதிகளைப் போல ஜனநாயகத்தின் அனைத்து அடிமட்ட நிலைகளையும் மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி அவசியம் – மத்திய உயர்கல்வித்துறை

5 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கற்பிக்கும் முறை இருக்க வேண்டும். இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். 5 … Read more

12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி – மத்திய அரசு

12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும்.மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும். 5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன .ஆறாம் வகுப்பு முதல் … Read more

புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மலிவான வாடகை வீடு – அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நகர்ப்புற புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் … Read more