கஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்

ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989-ஐ ஏற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.   இதன் மூலம் நாட்டின் இதர பகுதிகளைப் போல ஜனநாயகத்தின் அனைத்து அடிமட்ட நிலைகளையும் மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.