இட ஒதுக்கீட்டுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்பு பாலம் போடக்கூடாது-கமல்ஹாசன்

நேற்று 10% இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இட ஒதுக்கீட்டுக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் இணைப்பு பாலம் போடக்கூடாது. இட ஒதுக்கீடு என்ற கனவு முழுமையாக பலிக்காத நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்ய கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .