மீண்டும் சசிகலாவுக்கு மூச்சு திணறல்! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை!

சசிகலா அவர்கள், பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை இவருக்கு காய்ச்சல் காரணமாக லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு இவருக்கு சிகிச்சையளித்தது. இந்நிலையில், நேற்று மாலை இவருக்கு காய்ச்ச்ல்  மற்றும் மூச்சு … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல்! நலமாக உள்ளதாக தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல் உடல்நிலை தேறி வருவதாக தகவல். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான அகமது படேல்,   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் பைசல் பகுத்தறிவு தெரிவித்துள்ளார். அகமது படேலின் உடல் நிலை குறித்து, அவரது மகன் ஃபைசல் … Read more

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை.!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  தமிழக சட்டத்துரை அமைச்சர் சி.வி சண்முகம் நேற்று காலை அனுமதிக்கபட்டார்.  அங்கு இதயவியல் சிகிச்சையின் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என அப்போலா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என அப்போலா மருத்துவமனை கூறியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி.!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்து மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 12 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.