புதுச்சேரி – வழிபாட்டு தலங்களுக்கு இரவு 2 மணி வரை அனுமதி!

புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 2 மணி வரை வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி. புதுச்சேரியில் இன்று நள்ளிரவு 2 மணி வரை வழிபாட்டு தலங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே நள்ளிரவு 1 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: ஜனவரி14-18ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..!

தமிழகத்தில் வரும் 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளும் வகையிலும் பரவிவரும் உருமாறிய கொரோனா -ஓமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு பொதுமக்கள் … Read more