பெண் கைதி தப்பியோட்டம்- 2 காவலர்கள் சஸ்பெண்ட்

திருவாரூர் பேரளம் பகுதியை சேர்ந்த பெண் கைதி கஸ்தூரி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் கோமதி, சத்யாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தப்பியோடிய பெண் கைதி கஸ்தூரியை மீண்டும் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி…! தேடுதல் வேட்டையில் போலீசார்…!

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்காக நாள்தோறும் சிறை கைதிகள் ஆஜர்படுத்தப்படுவதுண்டு. இந்நிலையில்,  போலீஸ் பாதுகாப்புடன், சிறையில் இருந்து கைதி ஒருவர் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நின்றுகொண்டிருந்த போது, அந்த கைது நீதிமன்ற வளாகத்தின் சுவற்றின் மேல் ஏறி குதித்து, தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு  … Read more