காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி…! தேடுதல் வேட்டையில் போலீசார்…!

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி…! தேடுதல் வேட்டையில் போலீசார்…!

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்காக நாள்தோறும் சிறை கைதிகள் ஆஜர்படுத்தப்படுவதுண்டு. இந்நிலையில்,  போலீஸ் பாதுகாப்புடன், சிறையில் இருந்து கைதி ஒருவர் அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நின்றுகொண்டிருந்த போது, அந்த கைது நீதிமன்ற வளாகத்தின் சுவற்றின் மேல் ஏறி குதித்து, தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த கைதியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், போலீசார் தரப்பில் அது கைதி இல்லையென்றும், ஆஜர்படுத்துவதற்காக வந்தவர் தான் ஓடியதாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube