தமிழகத்தில் கோடை காலத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள்!

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோடை காலத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக  தெரிவித்துள்ளார்.  கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு  ரத்ததான முகாமை தொடங்கிவைத்து அவர் ரத்ததானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நீராதாரங்கள் உள்ள இடங்களில் போர்வெல் அமைத்து மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பயணிகளின் சிரமத்தை போக்க நிழற்குடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment