ஸ்டெர்லைட் வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன் அறிவித்ததை அடுத்து வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதன்படி  வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.