சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

வருகின்ற 9-ஆம் தேதி முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் வட்டார அளவில் சேலம் மாவட்டம் கொங்கனாபுரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து மாவட்டந்தோறும் வட்டார அளவில் 20-ஆம் தேதிக்குள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தில் மொத்தம் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டு, 5,11,186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, 4,37,492 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.  நிலுவையில் உள்ள 23,538 மனுக்கள் மீது வரும் 15-ஆம் தேதிக்குள் உ​ரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு  பிறப்பித்துள்ளார்