தமிழக பாஜக தலைவர் தமிழிசை- சோபியா வாக்குவாத விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.
அவர் சென்ற அதே விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற மாணவியும் பயணித்தார் இவர் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் தரை இறங்கிய நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா தன்னுடைய கையை உயர்த்தி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார் என்று சொல்லப்படுகிறது.இந்த பாசிச கோஷம் பாச சண்டையாக மாறி விமான நிலையத்திலே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமைடைந்த தமிழிசை இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் மாணவி சோபியா மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அன்றே மாணவியை கைது செய்யப்பட்டார்.மறுநாள் நீதிமன்ற நீதிபதி அறிவுறுரையின் படி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சோபியாவின் தந்தை பாஜக தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜகவினர் தன் மகளை மிரட்டியதால் அவர்களை பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சோபியா வாக்குவாத விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் விமான நிலையம், காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய புதுக்கோட்டை காவல் ஆய்வாளர், விமான நிலைய இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…