SK23 ஆரம்பமே சறுக்கல்.? தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்த புதிய கடிதம்…குழப்பத்தில் படக்குழு.!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது.

தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்.  மேலும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான முதல் செட்யூல் சென்னையில் தொடங்கியுள்ளது.

அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

தற்போது, படப்பிடிப்பில் வெளி மாநில அவுட்டோர் (Outdoor) யூனிட்களை பயன்படுத்துவதால், இன்றிலிருந்து எந்த திரைப்படத்திற்கும், சீரியல்களுக்கும் அவுட்டோர் யூனிட் வழங்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

வெளிமாநில யூனிட்களை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே முடி எடுக்கப்பட்டுள்ளது. அதனை, சிலர் மீறி வருவதாக தங்கள் குற்றசாட்டை முன் வைத்துள்ளனர் அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம். SK23 படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே இப்படி பிரச்சனை வந்துவிட்டதே என நெட்டிசங்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வாங்கிறார்கள். இது குறித்து SK23 படக்குழு விரைவில் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment